உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி.
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி.
உயிருடன் சாகிறேன் பாரடி...........
காணாமல் போனாலும் உன் காதல் சாபமா?
நீ கரையைக் கடந்த பின்னாலும் நான் மூழ்கும் ஓடமா?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி.
கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதி வரை.....
கண்களிலே தூவி விட்டாய் மண் துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது. அது வரமாக நீ தந்தது.
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும் என் துணையாக வருகின்றது.
ஆராத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?
இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உயிருடன் சாகிறேன் பாரடி........
கடலினிலே விழுந்தாலும் கரையிறுக்கும்.
காதலிலே விழுந்த பின்னே கரையில்லையே...
இந்தக் காதல் என்ன ஒரு நடை வண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ.
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே விட்டாயே எங்கே செல்ல
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி.
அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும் பழுதானால் தேரடி உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி.
Tuesday, December 28
Friday, December 10
உதற நினைப்பது நியாயமா?
நீ கூறிய ஒற்றை வார்த்தையில்
நொருங்கிப்போனதென் இதயம்...
பல மைல் தாண்டி – நான்
தனிமையில் நின்றாலும்............
உலகமாய் தோன்றிய
என்னுயிர்த் தோழனின் - ஒற்றை வார்த்தை
உயிர்கொல்லி நோயானது.
உன் தனிமைப் பொழுதுகளில்
உற்ற தோழியாய் நின்றவளை
உனக்கென ஒருத்தி வந்தவுடன்
உதற நினைப்பது நியாயமா?
Wednesday, December 1
ஆட்கொல்லி நோயின் விஸ்வரூபம். AIDS
ஒரு காலத்தில் சிவப்பு என்ற நிறத்திற்கான உவமை உழைத்து உழைத்து சிவந்து போன எம்மூதாதையர்களின் கைகளை கூறுவர். அவர்களின் புனிதத்தன்மையும் குறித்த நிறத்தில் புதைந்துபோயிருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிவப்பு என்றாலே அது யுஐனுளு இனை குறிக்கும் நிறமாக மாறிவிட்டது. டிசெம்பர் மாதம் முதலாம் திகதி அனைவரும் அறிந்த , மிகவும் பயங்கரமான ஒரு ஆட்கொல்லி நோயை நினைவுப்படுத்தும் நாள். எங்கு? , எப்போது ? , எப்படி? உருவானது என்ற வரலாற்றை கொண்டிராத குறித்த நோய் 1981 ம் ஆண்டில்தான் முதலாவதாக அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அதன் தாக்;கம் பெரியளவில் பேசப்படாத போதிலும் , இன்று உலகையே அச்சுறுத்தும் வகையில் விஸ்வரூபமெடுத்து காணப்படுகின்றது. ஆரம்பகாலங்களில் ஒரு சிலரின் உயிரை மட்டுமே குடிக்க ஆரம்பித்த நோய் , காலம் செல்லச் செல்ல அதன் தாகத்தை தீர்த்துக்கொள்ள பலரின் உயிர்களை குடிக்கத் தொடங்கியது. இதுவரை காலமும் குறித்த நோய் காரணமாக 25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம் மாத்திரம் 1.8 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 33.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தற்போது நோய் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் காணப்படுகின்றனர். மேலும் வருடாந்தம் 2.7 மில்லியன் பேர் எச்.ஐ.வி வைரசினால் தாக்கப்படுகின்றனர். 2 மில்லியன் மக்கள் வருடாந்தம் எயிட்ஸ் நோய் காரணமாக மரணமடைகின்றனர். இலங்கையில் 1987 ஆம் ஆண்;டு முதலாவது எயிட்ஸ் நோயாளி இனங் காணப்பட்டார். இலங்கையில் இதுவரை ஆயிரத்து 255 பேர் எச்.ஐ.வி. வைரசினால் தாக்கப்பட்டுள்ளனர். 332 பேருக்கு எயிட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது. எச்.ஐ.வி. வைரஸ் தாக்கியோரில் 518 பேர் பெண்களென சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. 15 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் 35 பேருக்கும் எச்.ஐ.வி. வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. (AIDS) என்பதன் பொருள் (ACQUIRED IMMUNE DEFICIENCY SYNDROMS). இதன் உருவாக்கத்திற்கு காரணம் ர் ஐ ஏ எனப்படும் ஒரு வகை வைரஸ். இந்த வைரஸ் உடலிலுள்ள நோய் எதிர்ப்புக் கலங்களை சேதமடையச்செய்து அவற்றின் தொழிற்பாடுகளை குறைவடையச்செய்யும். இதனால் நோய்த்தொற்றுகள் இலகுவில் உடலைத் தாக்கும். ர் ஐ ஏ தொற்று நன்றாக விருத்தியடைந்த நிலையே யுஐனுளு எனப்படுகின்றது.
ஒன்றின் பொருள் உடனே புரிந்துவிடுமெனில் அது சுவாரஸ்யமற்றுப்போய்விடும்.
உலகில் இடம்பெறும் விசித்திரமான அனைத்து நிகழ்வுகளும் அடுத்து இடம்பெறப்போகும் ஏதோவொன்றை உணர்த்தவே முற்படுகின்றன. ஒன்றின் பொருள் உடனே புரிந்துவிடுமெனில் அது சுவாரஸ்யமற்றுப்போய்விடும். அவ்வாறே உலகின் அனைத்து விசித்திரங்களும் இடம்பெறுகின்றன. எனினும் இறைவனின் படைப்பில் உருவாக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் ஏதோவொரு சக்தியை கொண்டனவாகவே காணப்படுகின்றன. அதில் ஆறறிவு படைத்த மனிதனே முதலாம் இடம் என தனக்குத் தானே புகழாரம் சூட்டிக்கொள்கின்றான். ஆனால் அவனிலும் பார்க்க உலகிலுள்ள பல உயிரினங்கள் அறிவில் உயர்ந்தவையாகவும் , எதிர்காலத்தை புரிந்துகொள்ளக்கூடியனவாகவும் உள்ளன என்றால் அதனை யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவ்வாறுதான் எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் எதையோ ஒன்றை உணர்த்தி நேற்று இலங்கையின் மட்டக்களப்பிலுள்ள கல்லடி பாலத்திற்கு கீழான பகுதியில், ஆயிரக்கணக்கான பாம்புகள் ஊர்வலம் சென்றுள்ளன. நேற்று இரவு 08.30 மணியளவில் (30.11.2010) 4 அடி நீளம் கொண்ட பாம்புகள் வாவியில் நீந்திச்சென்றுள்ளன. அதனை பார்வையிட ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். எதனை உணர்த்த இவை ஊர்வலம் சென்றனவோ? இறைவன் அறிவான் உண்மை. எனினும் மழை காரணமாக பாம்புகள் பாலத்தின் கீழ் வந்திருக்கலாமென, பிரதேச வாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர். பாம்புகளின் ஊர்வலம் நன்மையில் முடியுமெனில் சந்தோஷப்படத்தக்கது. ஆனால் தடுமாறும் மனம் தடுமாறிக்கொண்டுதான் இறுக்கின்றது. காரணம் கடந்த 2004 ம் ஆண்டு இவ்வாறு பாம்புகளின் ஊர்வலத்தை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட சுனாமி தாக்கம் ஏற்பட்டது அனைவரின் நினைவிலிருந்தும் மறந்துபோகவில்லை......
Subscribe to:
Posts (Atom)



