உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி.
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி.
உயிருடன் சாகிறேன் பாரடி...........
காணாமல் போனாலும் உன் காதல் சாபமா?
நீ கரையைக் கடந்த பின்னாலும் நான் மூழ்கும் ஓடமா?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி.
கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதி வரை.....
கண்களிலே தூவி விட்டாய் மண் துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது. அது வரமாக நீ தந்தது.
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும் என் துணையாக வருகின்றது.
ஆராத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?
இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உயிருடன் சாகிறேன் பாரடி........
கடலினிலே விழுந்தாலும் கரையிறுக்கும்.
காதலிலே விழுந்த பின்னே கரையில்லையே...
இந்தக் காதல் என்ன ஒரு நடை வண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ.
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே விட்டாயே எங்கே செல்ல
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி.
அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும் பழுதானால் தேரடி உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி உனக்கென வாழ்கிறேன் நானடி.

வரிகளில் ஒரு விழிப்புத் தெரிகிறது..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்