Wednesday, December 1
ஆட்கொல்லி நோயின் விஸ்வரூபம். AIDS
ஒரு காலத்தில் சிவப்பு என்ற நிறத்திற்கான உவமை உழைத்து உழைத்து சிவந்து போன எம்மூதாதையர்களின் கைகளை கூறுவர். அவர்களின் புனிதத்தன்மையும் குறித்த நிறத்தில் புதைந்துபோயிருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிவப்பு என்றாலே அது யுஐனுளு இனை குறிக்கும் நிறமாக மாறிவிட்டது. டிசெம்பர் மாதம் முதலாம் திகதி அனைவரும் அறிந்த , மிகவும் பயங்கரமான ஒரு ஆட்கொல்லி நோயை நினைவுப்படுத்தும் நாள். எங்கு? , எப்போது ? , எப்படி? உருவானது என்ற வரலாற்றை கொண்டிராத குறித்த நோய் 1981 ம் ஆண்டில்தான் முதலாவதாக அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அதன் தாக்;கம் பெரியளவில் பேசப்படாத போதிலும் , இன்று உலகையே அச்சுறுத்தும் வகையில் விஸ்வரூபமெடுத்து காணப்படுகின்றது. ஆரம்பகாலங்களில் ஒரு சிலரின் உயிரை மட்டுமே குடிக்க ஆரம்பித்த நோய் , காலம் செல்லச் செல்ல அதன் தாகத்தை தீர்த்துக்கொள்ள பலரின் உயிர்களை குடிக்கத் தொடங்கியது. இதுவரை காலமும் குறித்த நோய் காரணமாக 25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம் மாத்திரம் 1.8 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 33.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தற்போது நோய் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் காணப்படுகின்றனர். மேலும் வருடாந்தம் 2.7 மில்லியன் பேர் எச்.ஐ.வி வைரசினால் தாக்கப்படுகின்றனர். 2 மில்லியன் மக்கள் வருடாந்தம் எயிட்ஸ் நோய் காரணமாக மரணமடைகின்றனர். இலங்கையில் 1987 ஆம் ஆண்;டு முதலாவது எயிட்ஸ் நோயாளி இனங் காணப்பட்டார். இலங்கையில் இதுவரை ஆயிரத்து 255 பேர் எச்.ஐ.வி. வைரசினால் தாக்கப்பட்டுள்ளனர். 332 பேருக்கு எயிட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது. எச்.ஐ.வி. வைரஸ் தாக்கியோரில் 518 பேர் பெண்களென சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. 15 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் 35 பேருக்கும் எச்.ஐ.வி. வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. (AIDS) என்பதன் பொருள் (ACQUIRED IMMUNE DEFICIENCY SYNDROMS). இதன் உருவாக்கத்திற்கு காரணம் ர் ஐ ஏ எனப்படும் ஒரு வகை வைரஸ். இந்த வைரஸ் உடலிலுள்ள நோய் எதிர்ப்புக் கலங்களை சேதமடையச்செய்து அவற்றின் தொழிற்பாடுகளை குறைவடையச்செய்யும். இதனால் நோய்த்தொற்றுகள் இலகுவில் உடலைத் தாக்கும். ர் ஐ ஏ தொற்று நன்றாக விருத்தியடைந்த நிலையே யுஐனுளு எனப்படுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment