Tuesday, November 30

யார் காரணம்??????????

இளமைக்கால நினைவுகள்



கதிரவன் கரங்கள் தன் மேனியைத் தழுவ - மெல்லிய
காற்றும் கொஞ்சம் கருணையோடு
அருகே வந்து ஆறுதல் கூற
முற்களும் கூரான கற்களும் படர்ந்துள்ள – அந்த
குப்பை மேட்டின் நடுவே -ஒரு சிவப்பு மலர்
புலுதியில் புரலக் கண்டேன்

அதிகாலை கண்விழித்து
அர்ச்சகரின் வருகைக்காய் காத்திருந்து
ஈசனவன் பாதம் தனில் தன்னையும் - ஓர்
அடிமையாய் அர்ப்பணித்து
சத்திய ரூபன் அவனிடம்  சரணாகதி அடைவதோ?

இல்லை இளங்கோவனின் மாதவிபோல்
நளினமான பெண்ணொருத்தி – தன்
மெல் விரலால் உன்னைப் பறித்து – அவள்
உச்சியிலே ஆரம்பித்து , முட்டி வரை படர்ந்திருக்கும்
கருங்கூந்தல் கோபுரத்தின் தீபமாய் - ஏற்றிவைக்க
அவள் அழகோடு ஒன்றிணைந்து
அகிலத்தை ஆண்டு பின்
மோட்ச பதம் காண்பதோ?

எதனை இலட்சியமாய் மனதில் கொண்டு
இந்த மழலை மலர் மண்ணுலகில் உதித்ததோ?
இன்று யாரிழைத்த பிழையோ?
முற்பிறப்பு வினையோ?
புலுதியில் வீழந்தது.

சின்னஞ் சிறு மலரே உனக்காக கவி வடிக்க – நான்
உவமை ஒன்றை தேடினேன்.
சிந்தனைக்கு எதுவும் சிக்கவில்லை.
சில நொடிகள் - உன்
துயரத்தின் முழு உருவையும்
கண்களில் சுமந்தபடி கண்கலங்கி நின்றபோது
அந்தக் கண்ணீரின் சிறு துளிகளிலே பட்டுத்தெரித்தது- என்
இளமைக்கால நினைவுகள்........
ஆம். உனக்கு உவமை நானே..........

மறைந்தாலும் என் நினைவில் நீ மட்டுமே



என்னுள் எனக்காய் துடிக்கும் இதயம் கூட
ஒரு நாளில் ஓய்ந்துவிடும்.
என் அன்னையவள் அன்பு மட்டுமே
நான் மறைந்த பின்னும்  என் நினைவுகளை
சுமந்து நிற்கும்...............

Tuesday, November 23

நட்பின் நாடகம்

பழகிய நாள் முதல் -பல வித பாவங்களில்
புரிந்துகொள்ள முடியவில்லை - என்னுயிர் தோழிகளை
வாழ்க்கை நாடகத்தில் தங்களுடைய பாத்திரத்தை
அனைவரும் செவ்வனே நிறைவேற்றுகின்றனர் .....
என்னைத் தவிர............

வயிற்றில் பாம்மைச் சுமந்த பெண்




அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் இருந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப்பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும் மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாடரிசியா ரோஜா என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடையை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப்போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினார்கள். அதேவேளை பாடரிசியா வலியால் துடித்ததுமல்லாது உட்கொண்ட உணவை வாந்தி எடுத்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை. இதைப்பார்த்து குழம்பிய  டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க முடிவு செய்து,   எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாடரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான்.
 
உடனடியாக பாடரிசியவுக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொண்டனர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த அந்தப் பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடியே வெளியே வந்தது. இதைப் பார்த்த நேர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். டாக்டர்களும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அந்தப் பாம்பு குட்டியாக இருந்தபோதே பாடரிசியாவின் குடலுக்குள் புகுந்து, பாடரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உண்டு அதுவும் வளர்ந்திருக்கலாம். எப்படி அந்தப் பாம்பு பாடரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாடரிசியா சுற்றுலாச் சென்றவேளை ஆற்றுநீரை அள்ளிக் குடித்திருக்கிறார்.

அப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் சென்று பொரித்து வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பாடரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு வெள்ளை நிறமாகவும் , 1.83 மீற்றர் நீளமாகவும் உடலில் கறுப்புப் பட்டைகளுடனும் காணப்பட்டது.

ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது.

அதைப் பொறுக்கமுடியாமல் அவர் வயிற்றை கிழித்துக்கொண்டு இறந்து போனார். பின்னர் அவரைச் சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்துவிட்டனர். சில நாட்கள் கழித்து அந்தப் பெட்டிக்குள் இருந்து ஒரு பெரிய பாம்பு வெளியே வந்தது. அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என பின்பு தெரிய வந்தது.

இதேபோல 1642 இல் ஜேர்மனியைச் சேர்ந்த காத்ரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவமாகும். இந்நிலையில் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, ஆரோக்கியம் மேம்பட்ட இந்த நவீன காலத்தில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியே வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, November 16

வெற்றி தோல்வியின்றி இந்தியா, நி- சிலாந்து

இந்திய மற்றும் நிய+சிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்;ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நிய+சிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி தங்களது , முதலாவது இனிங்சிற்காக 350 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. அணி சார்பாக டிம் மெக்கின் டொஷ் 102 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் சகீர்கான் ஹர்பஜன்சிங் ஆகியோர் தலா 4 விக்கட்டுகளை வீழத்தினர.; தொடர்ந்து தங்களது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி சகல விக்கட்டுகளையும் இழந்து , 472 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
அணிசார்பாக ஹர்பஜன் சிங் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். நிய+சிலாந்து அணியின் பந்துவீச்சி;ல் டேனியல் விட்டோரி 5 விக்கட்;டுகளையும் , டிம் சவுத்தி 3விக்கட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து தங்களது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய நிய+சிலாந்து அணி , 8 விக்கட்;டுகளை இழந்து ,48 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தி ,இந்திய அணிக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கொடுத்தது. நிய+சிலாந்து அணி சார்பாக பிரேன்டன் மெக்கலம் 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதனடிப்படையில் 327 எனும் வெற்றி இலக்கை நோக்கி , துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி விக்கட் இழப்பின்றி 68 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போட்டி நிறைவுக்கு வந்தது. இந்திய அணி சார்பாக வீரேந்திர செவாக் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனடிப்படையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஏற்கனவே இடம்பெற்ற  ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன்,  இப்போட்டியும் சமநிலையில் முடிவடைந்திருக்கும் நிலையில் மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போடடி எதிர்வரும் 20 ம் திகதி இடம்பெறவுள்ளது. போட்டியில் ஆட்டநாயகனாக நிய+சிலாந்து அணியின் பிரென்டன் மெக்கலம் தெரிவாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கை பாதை

 
 
வாழ்க்கையின் பாதை , பலவிதமான மாற்றங்களுடன் ...........
ஏறிவந்த பாதை , பல ஏற்றத்தாழ்வுகளுடன்...........
நினைத்து அழ  நேரமிருந்தும் , படுத்து அழ மடியின்றி............
வாழ்நாட்களின் பாரம் சுமக்க முடியாமல் , நாட்கள் நகர்கின்றன..............

அததெரண அறிவிப்பாளர் போட்டியில் நான்.

பெற்றுக்கொள்ள முடிந்தது. 



திறமைக்கு முதலிடம்...!

கடந்த 13 ஆம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தில் தெரண இணையத்தளம் நடத்திய ஒலி அலையின் சிகரம் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய முதல் மூவருக்கு கையடக்க தொலைபேசி உட்பட பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டன.

இறுதிச் சுற்றுப் போட்டி வெற்றியாளரை தெரிவு செய்யவென நடத்தப்பட்ட நான்கு கட்டங்களை கொண்ட போட்டிகளில் தெரிவு செய்யப்பட்ட முதல் 10 பேருக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டன.

போட்டி வெற்றியாளர் விபரம்

1 ஆம் இடம் ப.லோகேஸ்வரன் 2 ஆம் இடம் எம்.எப்.எம்.பஸீர் 3 ஆம் இடம் ஈ.கஜிந்தன் 4 ஆம் இடம் வி.விஜயலலிதா 5 ஆம் இடம் சி.விலாசினி 6 ஆம் இடம் கா.காந்தீபன் 7 ஆம் இடம் எஸ்.ஏ.எம்.ரஸ்மி 8 ஆம் இடம் பிறின்சியா டிக்சி பத்மஜோதி 9 ஆம் இடம் த.மனோக் பிரசன்னா 10ஆம் இடம் ஆர்.காயத்திரி