![]() |
| இளமைக்கால நினைவுகள் |
கதிரவன் கரங்கள் தன் மேனியைத் தழுவ - மெல்லிய
காற்றும் கொஞ்சம் கருணையோடு
அருகே வந்து ஆறுதல் கூற
முற்களும் கூரான கற்களும் படர்ந்துள்ள – அந்த
குப்பை மேட்டின் நடுவே -ஒரு சிவப்பு மலர்
புலுதியில் புரலக் கண்டேன்
அதிகாலை கண்விழித்து
அர்ச்சகரின் வருகைக்காய் காத்திருந்து
ஈசனவன் பாதம் தனில் தன்னையும் - ஓர்
அடிமையாய் அர்ப்பணித்து
சத்திய ரூபன் அவனிடம் சரணாகதி அடைவதோ?
இல்லை இளங்கோவனின் மாதவிபோல்
நளினமான பெண்ணொருத்தி – தன்
மெல் விரலால் உன்னைப் பறித்து – அவள்
உச்சியிலே ஆரம்பித்து , முட்டி வரை படர்ந்திருக்கும்
கருங்கூந்தல் கோபுரத்தின் தீபமாய் - ஏற்றிவைக்க
அவள் அழகோடு ஒன்றிணைந்து
அகிலத்தை ஆண்டு பின்
மோட்ச பதம் காண்பதோ?
எதனை இலட்சியமாய் மனதில் கொண்டு
இந்த மழலை மலர் மண்ணுலகில் உதித்ததோ?
இன்று யாரிழைத்த பிழையோ?
முற்பிறப்பு வினையோ?
புலுதியில் வீழந்தது.
சின்னஞ் சிறு மலரே உனக்காக கவி வடிக்க – நான்
உவமை ஒன்றை தேடினேன்.
சிந்தனைக்கு எதுவும் சிக்கவில்லை.
சில நொடிகள் - உன்
துயரத்தின் முழு உருவையும்
கண்களில் சுமந்தபடி கண்கலங்கி நின்றபோது
அந்தக் கண்ணீரின் சிறு துளிகளிலே பட்டுத்தெரித்தது- என்
இளமைக்கால நினைவுகள்........
ஆம். உனக்கு உவமை நானே..........









