Friday, December 10

உதற நினைப்பது நியாயமா?


நீ கூறிய ஒற்றை வார்த்தையில்
நொருங்கிப்போனதென் இதயம்...
பல மைல் தாண்டி – நான்
தனிமையில் நின்றாலும்............
உலகமாய் தோன்றிய
என்னுயிர்த் தோழனின் - ஒற்றை வார்த்தை
உயிர்கொல்லி நோயானது.
உன் தனிமைப் பொழுதுகளில்
உற்ற தோழியாய் நின்றவளை
உனக்கென ஒருத்தி வந்தவுடன்
உதற நினைப்பது நியாயமா?

1 comment: